இலங்கையில் பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
நாட்டில் மேலும் 707 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று இதுவரையில் 2,340 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நாட்டில் இதுவரை 221,263 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் 186,516 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல், நாட்டில் இதுவரையில் 2,073 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.