இலங்கையில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல்! - ஜனாதிபதிக்கு அனுப்பட்டுள்ள அவசர கடிதம்
இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் வாராந்த விகிதம் 12%ஆல் அதிகரித்துள்ளது, அதேநேரம் வாராந்த இறப்பு விகிதம் 28% ஆல் அதிகரித்துள்ளது.
இந்த தகவலை AMS என்ற மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சங்கத்தினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தொற்றுநோயைக் குறைப்பதற்காக பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் போது கடுமையான நடவடிக்கைகளின் முக்கியத்துவம் வலியுறுத்தபட்டுள்ளது.
கோவிட் பரவல் காரணமாக சுகாதார ஏற்பாடுகள் மற்றும் அதிக ஒக்ஸிஜன் தேவை ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தெளிவான மற்றும் உறுதியான தடுப்பூசி கொள்கையை இலங்கையின் சுகாதார அமைச்சகம் வெளியிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் இந்த விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர் சங்கம் கோரியுள்ளது.
தடுப்பூசி திட்டம், சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் வழங்கப்பட வேண்டும், மேலும் அதை அமுல்படுத்துவதை கடுமையான நிபந்தனைகளுடன் கண்காணிக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் அழைக்கப்பட வேண்டும். இந்த தடுப்பூசி கொள்கையை மீற யாரையும் அனுமதிக்கக்கூடாது.
தடையற்ற சுகாதார சேவைகளை பராமரிப்பதற்காகவும், சமீப காலங்களில் முன்னுரிமை தடுப்பூசி காரணமாக ஏற்பட்ட காயங்களை சரிசெய்யவும் தீவு முழுவதும் உள்ள அனைத்து முன்னணி சுகாதார ஊழியர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும் உரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.