சபரகமுவை மற்றும் உருகுணை பல்கலைக்கழக மாணவர்கள் இடையில் கோவிட் பரவல்
சப்ரகமுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இம்புல்பே சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பலாங்கொடை வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட ரெபீட் அன்டிஜன் பரிசோதனையில் இந்த மாணவர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சபரகமுவை பல்கலைக்கழகத்திற்கு பரீட்சைக்காக வருகை தந்தை ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று மதியம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வித பாதுகாப்பு முறைகளும் இன்றி மாணவர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல்கலைக்கழக கோவிட் - கொத்தணி உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே உருகுணை பல்கலைக்கழகத்தில் 23 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதாக தெரியவருகிறது.