கொரோனா இரண்டாம் அலை: பாதுக்கயில் 120 தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கொழும்பின் புறநகர் பாதுக்கயில் இரண்டாம் அலை கொரோனா தொற்றின் பின்னர் இதுவரை மொத்தம் 120 கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதுக்க சுகாதார மருத்துவ அதிகாரி துமித்ரா கஹங்காம இதனை தெரிவித்துள்ளார்.
கலகெதரா கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 40 பேரில் 26 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இந்தப்பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின்போதே இந்த 26பேரும் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.
இதேவேளை மேலும் பதினைந்து நெருங்கிய தொடர்புகளில் பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.