மேல் மாகாண வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் கோவிட் நோயாளர்கள்! - காமினி தர்மசேன
மேல் மாகாணத்தில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் உள்ள கட்டில்கள் அனைத்தும் நோயாளர்களால் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மாகாண சுகாதாரத்துறை செயலாளர் காமினி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் இடம் இல்லாததால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த இரு நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்களில் ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டோர் பேர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.