கிளிநொச்சியில் பொலிஸார் 21 பேருக்கு கோவிட் தொற்று
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 21 பொலிஸாருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு வெளியான பிசிஆர் முடிவுகளின் பிரகாரம் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஏனையவர்களுக்குமான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதோடு,
பொலிஸ் நிலையங்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் அவதானத்துடன்
இருக்குமாறும் நோய் அறிகுறிகள் தென்படுகின்ற போது உடனடியாக தங்களை
பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளுமாறும் சுகாதார துறையினர்
கேட்டுக்கொண்டுள்ளனர்.