பிரித்தானியாவில் அச்சுறுத்தலாகியுள்ள கோவிட் தொற்று! - அரசுக்கு எச்சரிக்கை விடுப்பு
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,660 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 50 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் வழக்குகள் தொடர்ச்சியாக 7வது நாளாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏப்ரல் 9ம் திகதிக்கு பின்னர் நாளாந்த அதிக எண்ணிக்கையிலான கோவிட் உயிரிழப்புகள் இன்று பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மொத்தமாக 128,481 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 54,296 பேர் திங்களன்று கோவிட் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
இதன்படி கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,978,017 ஆக உயர்ந்துள்ளது. 125,360 பேர் நேற்று தடுப்பூசியின் இரண்டாவது அளவு பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,997,491 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத் துறையின் சமீபத்திய தகவல்கள், ஜூலை 7ம் திகதி 564 பேர் வைரஸுக்கு சாதகமான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏழு நாட்களில் 3,236 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது வாராந்திர 53.7 வீத அதிகரிப்பாகும்.
இதற்கிடையில், ஆகஸ்ட் இறுதி வரை கோவிட் வழக்குகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு தற்செயல் திட்டங்களை தயார் செய்யுமாறு விஞ்ஞானிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் புதிய மாறுபாடுகள் தோன்றும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் அரசாங்க விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் எச்சரித்தனர்.
இதேவேளை, பிரித்தானியா மருத்துவ சங்கம் (பி.எம்.ஏ) ஜூலை 19ம் திகதி இங்கிலாந்தின் கோவிட் வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவது பொறுப்பற்றது என்றும் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri