கோவிட் தொற்றால் இலங்கையில் 67 சிறுவர்கள் பலி!
கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் நாட்டில் 67 சிறுவர் மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குடும்ப சுகாதார செயலணியின் நிபுணத்துவ மருத்துவர் கபில ஜயரட்ன (Dr. Kapila Jayaratne) இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இவ்வாறு உயிரிழந்த 67 சிறுவர்களில் 13 சிறுவர்கள் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். ஏனைய சிறுவர்களில் 95 வீதமானவர்கள் இறுதி நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏதேனும் நோய் நிலைமைகள் ஏற்பட்டால் பிள்ளைக்கு காய்ச்சல், இருமல் அல்லது வேறும் உபாதைகள் ஏற்பட்டால் தகுதியுடைய மருத்துவர் ஒருவரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதில் திருப்தி இல்லையென்றால் அருகாமையில் இருக்கும் வைத்தியசாலைக்கு செல்லவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
