நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு கோவிட் தொற்று! தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிற்சாலைகளில் பணிப்புரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பதாகவும் எனினும் தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏனைய ஊழியர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் அங்காங்கே நடத்தப்பட்ட பீ.சீ. ஆர் பரிசோதனைகளில் ஊழியர்களுக்கு மத்தியில் கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருவதை காண முடிந்துள்ளது.
ஒரு தொழிற்சாலையில் முதல் வாரத்தில் 12 ஊழியர்களுக்கு கோவிட் தொற்றி இருப்பது உறுதியானது அடுத்த வாரத்தில் 55 ஊழியர்களுக்கு கோவிட் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டது.
மற்றுமொரு தொழிற்சாலையில் 100 ஊழியர்களுக்கு கோவிட் தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.