யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேருக்கு கோவிட் தொற்று
யாழ்ப்பாணத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட 21 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட தையிட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.