யாழ். பல்கலை மாணவர்கள் இருவருக்குக் கோவிட்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் உட்பட்ட 185 பேருக்கு நேற்று முன்தினம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவர்களில் 173 பேருக்குத் தொற்றில்லை என்றும், 12 பேர் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.
இந்நிலையில், நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மீளவும் 12 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முடிவுகளின் அடிப்படையில் மாணவன் ஒருவரும், மாணவி ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே மேலும் ஒருவருக்கு மீளவும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
