யாழில் இன்றும் 12 பேருக்குக் கொரோனா! வைத்தியர் சத்தியமூர்த்தி தகவல்
யாழ்ப்பாணத்தில் இன்றும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 676 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேருக்கும், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் உடுவிலில் 8 பேருக்கும் (ஒருவரைத் தவிர 7 பேரும் தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தமையால் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்), சண்டிலிப்பாயில் 3 பேருக்கும் (தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தமையால் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்), தெல்லிப்பழையில் ஒருவருக்கும் (தொற்றாளருடன் தொடர்பு கொண்டிருந்தமையால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்), புதுக்குடியிருப்பில் ஒருவருக்கும் (ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்), தம்பகொலபட்டின தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
