கோவிட் அச்சம்! 4 பிரதான அஞ்சலகங்கள் மற்றும் 22 உப அஞ்சலகங்கள் மூடல்
கோவிட் 19 வைரஸ் பரவல் ஆபத்து காரணமாக நாடு முழுவதிலும் உள்ள நான்கு பிரதான அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன் 22 உப அஞ்சல் நிலையங்களின் பணிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு கொம்பனித்தெரு அஞ்சல் அலுவலகத்தில் பல கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பாணந்துறை வாழைத்தோட்டம், திருகோணமலை உள்ளிட்ட பிரதான அஞ்சல் அலுவலகங்களிலும் கோவிட் தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த அஞ்சல் அலுவலகங்களில் கிருமி தொற்று நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் அவற்றை திறக்க உள்ளதாகவும் மீண்டும் திறக்கப்படும் தினம் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.