ஆனந்தசங்கரிக்குக் கொரோனாத் தொற்று உறுதி!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடல் சுகவீனம் காரணமாக அவருக்கு நேற்று அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் பி.சி.ஆர். பிரிசோதனையும் அவருக்கு நேற்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையிலும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள், சாரதி உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வீ.ஆனந்தசங்கரியின் உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், அவரது
வயதைக் கருத்தில்கொண்டு வைத்தியசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவரது குடும்ப உறுப்பினர்கள்
தெரிவித்துள்ளனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan