ஈரானின் அதிகார மையங்களை வேரறுக்கும் அமெரிக்கா! வளைகுடாவில் ஓடும் இரத்த ஆறு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேல் ஒன்றிணைந்து ஈரானை நான்கு புறமும் சுற்றி வளைத்துள்ளன.
பல ஆண்டுகளாகத் திரைமறைவில் நிலவி வந்த உளவுப்போர், இன்று ஈரானின் உயர்மட்டத் தலைவர்களைத் துல்லியமாகக் குறிவைத்துத் தூக்கும் நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது.
மொசாட்டின் அதிரடி ஊடுருவல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள், ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்பையே நிலைகுலையச் செய்து, அந்நாட்டின் அதிகார மையங்களுக்குள் ஒரு பெரும் அச்சத்தை விதைத்துள்ளன.
இதற்குப் பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைப் படைகளைத் தயார் படுத்தி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழுமையான உலகப் போர் சூழலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
உலக நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் தொடர் இராணுவத் தாக்குதல்களால் ஈரான் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், இது சர்வதேச எரிபொருள் சந்தையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
2ஆம் உலகப் போருக்கு பின்னர் மிக மோசமான முதல் தாக்குதல் இலங்கைக்கு அருகில்..! அமெரிக்கா வெளியிட்ட பரபரப்பு காணொளி
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam