பாடசாலை மாணவன் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய பொலிஸ் கொரோனா கொத்தணி
மேல் மாகாணத்தின் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அளுத்தகம, பென்தோட்ட பாலத்திற்கு அருகில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பாடசாலை மாணவன் பேருந்தில் பயணிப்பதற்கு வருகைத்தந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படப்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு அமைய அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள்து.
குறித்த மாணவன் களுத்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியின் மகனாகும்.
அதற்கமைய அந்த பொலிஸ் அதிகாரி உட்பட களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் 68 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் அதிகாரி உட்பட நால்வர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய குறித்த பாடசாலை மாணவன் ஊடாக மற்றுமொரு பொலிஸ் கொரோனா கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam