அரசு நிறுவனங்களுக்கு கோப் குழு விடுத்துள்ள எச்சரிக்கை
பொது நிறுவனங்களில் ஊழல் செய்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு(cope) முடிவு செய்துள்ளது.
முன்னதாக, கோப் குழு அனைத்து நிறுவனங்கள் தொடர்பான பொதுவான அறிக்கையை மட்டுமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும், அரசு நிறுவனங்களில் ஊழல் குறித்து பரிந்துரைகளை வழங்குவதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் குழு எடுக்கவில்லை என்றும் குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
ஊழல் மற்றும் முறைகேடு
அதன்படி, வரலாற்றில் முதல்முறையாக, ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெறும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தனித்தனி கோப்புகளைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்ட நடவடிக்கை எடுப்பது எளிதாக இருக்கும் வகையில், அனைத்து ஆதாரங்களையும் உள்ளடக்கிய கோப்புகளைத் தயாரிக்க நம்புவதாகவும், எதிர்காலத்தில் கோப்புகளைத் தயாரிக்க ஒரு சட்ட அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |