சாகல ரத்நாயக்கவின் கையொப்பத்தை போலியாக இட்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் உத்தரவு
ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்கவின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரையை போலியாக தயாரித்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.

போலி கையொப்பம்
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சாகல ரத்நாயக்கவின் கையொப்பத்தினை பயன்படுத்தி வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பி 14 பொலிஸ் உத்தியோகத்தர்களை வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த கடிதம் தொடர்பில் சந்தேகம் கொண்ட வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், அதன் நம்பகத்தன்மை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் வினவியபோது, அவ்வாறான கடிதம் எதுவும் சாகல ரத்நாயக்கவினால் அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை
ஆரம்பித்து போலியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகரை கைது செய்தனர்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan