மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் பயணித்த வாகனம் விபத்து!
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் இணைப்பு செயலாளர் பயணித்த வாகனம் செங்கலடி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், வாகனத்தை செலுத்தி வந்த சாரதி மற்றும் வாகனத்தில் இருந்தவர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் மது போதையில் இருந்ததாகவும் பொது மக்கள் கூறியுள்ளனர். இதன் போது வாகனத்தின் இலக்க தகட்டினை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து அந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.