உரு மாற்றத்துடன் சந்தைக்கு வந்துள்ள சமையல் எரிவாயு
இலங்கையில் பலத்த சர்ச்சைகளின் பின்னர் மீண்டும் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க துறைசார் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வழிகாட்டல்களுக்கமைய, சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
தற்போது சந்தைக்கு விடப்பட்டுள்ள எரிவாயு கொள்கலன்களில் வெள்ளை பின்னணியில் சிவப்பு நிறத்திலான லிட்ரோ நிறுவனத்தின் இலட்சினை கொண்ட பொலித்தின் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று புதிய லாஃப்ஸ் எரிவாயு கொல்கலன்களில் மஞ்சள் நிறப்பின்னணியில், நீல நிற இலட்சினை கொண்ட பொலித்தீன் சீல் வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக நாடு தழுவிய ரீதியில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், அதற்கான சந்தை விநியோகம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam