சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும்:லிட்ரோ தலைவர்
உலக சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்துள்ளதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட விலையை விட விலை குறைப்பு இருக்கும்

அண்மையில் எரிவாயுவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதனை விட அதிகமாக இந்த விலை குறைப்பு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
16 மாதங்களுக்கு தொடர்ந்தும் எரிவாயுவை விநியோகிக்கக் கூடிய வகையில் எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல மாதங்களாக சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. தற்போது போதுமான அளவில் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருவதுடன் தட்டுப்பாடும் நீங்கியுள்ளது எனவும் முதித்த பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam