சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும்:லிட்ரோ தலைவர்
உலக சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்துள்ளதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட விலையை விட விலை குறைப்பு இருக்கும்

அண்மையில் எரிவாயுவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதனை விட அதிகமாக இந்த விலை குறைப்பு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
16 மாதங்களுக்கு தொடர்ந்தும் எரிவாயுவை விநியோகிக்கக் கூடிய வகையில் எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல மாதங்களாக சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. தற்போது போதுமான அளவில் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருவதுடன் தட்டுப்பாடும் நீங்கியுள்ளது எனவும் முதித்த பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri