சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும்:லிட்ரோ தலைவர்
உலக சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்துள்ளதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட விலையை விட விலை குறைப்பு இருக்கும்

அண்மையில் எரிவாயுவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதனை விட அதிகமாக இந்த விலை குறைப்பு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
16 மாதங்களுக்கு தொடர்ந்தும் எரிவாயுவை விநியோகிக்கக் கூடிய வகையில் எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல மாதங்களாக சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. தற்போது போதுமான அளவில் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருவதுடன் தட்டுப்பாடும் நீங்கியுள்ளது எனவும் முதித்த பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன் News Lankasri
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri