மட்டக்களப்பு வைத்தியசாலை பிரச்சினைகள் தொடர்பில் செந்தில் தொண்டமான் விளக்கம் (Video)
மட்டக்களப்பு வைத்தியசாலை தொடர்பான பிரச்சினைகளை மத்திய அரசிடம் தெளிவுபடுத்தி தீர்வை பெற்றுத்தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நாவலடியில் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி ஆய்வு
“நமது நாட்டில் சுகாதார துறையில் நிறைய கட்டுப்பாடுகள் காணப்படுவதால் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்களை கொண்டே சுகாதார துறை இயங்கி வருகின்றது.
பெரும்பாலான மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதால் தற்போது நாட்டில் இருக்கும் மருத்துவர்களுக்கு நாம் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை ஆய்வு செய்வதோடு விரைவில் இந்த பிரச்சினைக்கான தீர்வுகளை மேற்கொள்வோம்.
மேலும் மட்டக்களப்பு வைத்தியசாலை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் குறித்த வைத்தியசாலை தொடர்பான பிரச்சினைகளை மத்திய அரசிடம் நான் தெளிவுபடுத்துகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் உயரதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் லட்சண்யா பிரசந்தன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri