கொழும்பு தேசிய மருத்துவமனையின் இயக்குநர் பதவியில் சர்ச்சை
கொழும்பு தேசிய மருத்துவமனையின்(National Hospital of Sri Lanka) இயக்குநர் பதவி வெற்றிடமாக உள்ள நிலையில், புதிய இயக்குநரை நியமிப்பது தொடர்பாக மருத்துவமனையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இரண்டு மூத்த அதிகாரிகளின் தகுதி தொடர்பான பிரச்சினை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது, எனினும் அவர்களில் ஒருவரே புதிய இயக்குநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
பதவியில் சர்ச்சை
சூழலைக் கருத்தில் கொண்டு, இரண்டு மூத்த அதிகாரிகளில் ஒருவரின், ஒழுங்கற்ற நடத்தை காரணமாக, குறித்த பதவிக்கு நியமிக்க முடியுமா என்பது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் நியமிக்கப்பட மாட்டார் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இரண்டாவது மூத்த அதிகாரியின் கடந்த காலப் பதிவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, இதன் காரணமாக, சுகாதார அமைச்சு குறித்த நியமனத்தை மேலும் தாமதப்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிர்வாக செயல்பாடுகளை மேலும் சீர்குலைக்காமல் திறமையான சேவையை வழங்கக்கூடிய, கறைபடியாத, தலைமைத்துவம் கொண்ட ஒரு இயக்குநரை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவ சங்கங்கள் மற்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
