இலங்கையில் முற்றாக தடை விதிக்கப்படலாம்: அரசாங்கத்தின் கடுமையான எச்சரிக்கை
பொலித்தீன் பைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்வதில் அரசின் சுற்றுச்சூழல் துறைகள் கவனம் செலுத்தியுள்ளன.
சூப்பர் மார்க்கெட்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான பொலித்தீன் பைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.

இலவச பொலித்தீன் பைகள் விநியோகம்
இது தொடர்பான விதிமுறைகளை தயாரிக்கும் பணியை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மற்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தொடங்கியுள்ளன.
பல்பொருள் அங்காடியொன்று வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு பில்லியன் இலவச பொலித்தீன் பைகளை வழங்குகின்றது.
மேலும் நாட்டில் ஆண்டுதோறும் சுற்றுச்சூழலில் வீசப்படும் மொத்த பொலித்தீன் பைகளின் அளவு சுமார் 200 கோடி ஆகும்.

பொலித்தீன் பைகளின் உற்பத்தி மற்றும் வர்த்தக தடை
இதற்கமைய, குறிப்பிட்ட பல்பொருள் அங்காடி ஒன்றினால் மட்டும் நாளாந்தம் வழங்கப்படும் பைகளின் தொகை 05 இலட்சம் ஆகும்.
சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் வகையில் பொலித்தீன் பைகள் உற்பத்தி செய்யப்பட்டால், வரும் ஆண்டில் பொலித்தீன் பைகளின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை தடை செய்வதிலும் அரசின் சுற்றுச்சூழல் துறைகள் கவனம் செலுத்தியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam