சட்டவிரோத கடலட்டை தொழிலைக் கட்டுப்படுத்துக! - டக்ளஸ் பணிப்புரை
யாழ்.குருநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதக் கடலட்டை செயற்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தால் அடையாளப்படுத்தபட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்படடுள்ளது.
இந்நிலையில், அதனை மீறுகின்ற வகையிலும் கடற்றொழில் சங்க ஒழுங்கு விதிகளை மீறும் வகையில் சுமார் 39 இழுவை வலைப் படகுகள் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றன என்று குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதையடுத்து, தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்தி கடலட்டை தொழில் ஈடுபடுகின்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பிரதானி ஜெ. சுதாகரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
