ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன எரிபொருள் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
டோஹா ஹமாட் சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டாரில் உள்ள குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டோஹா ஹமாட் விமான நிலையம், கத்தார் மற்றும் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கான தற்போதைய விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்கள் 31.10.2023 அன்று காலாவதியாகவுள்ளன.
இந்நிலையில், அரசாங்க கொள்முதல் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இரண்டு விமான நிலையங்களில் உள்ள ஒரே விமான எரிபொருள் சப்ளையர்களுக்கு இருபத்தி நான்கு மாதங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri