மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் ஊடாகவும் பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்ட பகுதிகளில் உள்ள உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி மற்றும் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு அந்தந்த பாடசாலைகளில் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் 360க்கும் மேற்பட்ட உயர் தரப்பரிவு மாணவர்கள் தங்களது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகப் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் மாணவர்களும் பெற்றோரும்
ஆர்வம் காட்டி வருவதைக் காணமுடிகின்றது.




கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam