தமிழர்களிடையே தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்?
கடந்த நவம்பர் 9ஆம் திகதி இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த 19 பேரை வானில் அழைத்து வந்த ஓட்டுநரையும், அவரது உதவியாளர் ஒருவரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதன் காரணமாக இவ்வாறான படகுப் பயணங்களை தொடர்கின்றதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கையிலிருந்து வெளியேறுபவர்கள் செல்லக்கூடிய இடங்களில் முதன்மையான பட்டியலில் இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ரியூனியன் தீவு ஆகிய நாடுகள் உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை
நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, படகு மூலம் அஸ்திரேலியாவில்
தஞ்சமடைபவர்களை முழுமையாக நிராகரித்து திருப்பி அனுப்பவும் அல்லது நாடு
கடத்தவும் செய்து வருகின்றது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 12 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
