ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு!

Mullaitivu Sri Lanka
By Keethan Oct 28, 2022 12:14 PM GMT
Report

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காடழிப்பு, மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலகம் மற்றும் பொலிஸார் தவறியுள்ளதாக மக்கள் தெரிவித்த கருத்து செய்தியாக ஊடகங்களில் வெளியானது.

அதனை தொடர்ந்து மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி நிறஞ்சனா அவர்களினால் பாண்டியன் குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை கடந்த 26.10.2022 அன்று முறையிடப்பட்டுள்ளது.

போர் நிறைவடைந்து 10 ஆண்டுகளைத் தாண்டி விட்ட இன்றைய காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்கள் பாரியளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.

ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு! | Continued Deforestation Complain To Police

அழிக்கப்படும் இயற்கை வளங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரை கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு, காடழிப்பு, மரவியாபாரம் என பல்வேறு வழிகளில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. மணல் அகழ்வின் மூலமும் பாரிய அளவில் இயற்கை வளங்களும் வனப்பகுதிகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் அதிகளவான வனப்பரப்பினை கொண்ட மாவட்டங்களில் முதன்மையாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது இந்த நிலையில் வனவளம் அழிக்கப்படுவதற்கு யார் பொறுப்பு என மக்கள் கருத்து தெரிவித்துவருகின்றார்கள்.

ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு! | Continued Deforestation Complain To Police

அரச நிர்வாகத்தினருக்கு தெரிந்தும் தெரியாமலும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதுடன் பணம் படைத்தவர்களின் கைகளிலேயே காணிபிடிப்பும் செல்கின்றமை கவலையளிக்கின்ற விடயம் என மக்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

மறுக்கப்படும் கோரிக்கைகள்

இன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய செய்கைக்காக ஒரு துண்டு காணிகூட இல்லாத மக்கள் பலர் வாழ்ந்து வருகின்றார்கள் அவ்வாறான மக்கள் அரசாங்கத்திடம் காணிகோரி கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை அவர்களுக்கான காணித்துண்டுகளை அரச அதிகாரிகள் வழங்கமால் பணம் படைத்தவர்களுக்கு வழங்கிவருகின்றமை கவலையளிக்கின்றது.

ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு! | Continued Deforestation Complain To Police

அரசாங்கத்தின் காணி வழங்கல் முறையின் பல்வேறு பட்ட படிமுறைகளான குத்தகை அடிப்படை மற்றும் அபிவிருத்தி திட்ட அடிப்படை என திட்டங்கள் ஊடாக காணி உள்ளவர்களுக்கே தொடர்ச்சியாக காணிகள் வழங்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்து வருகின்றார்கள்.

பாமர மக்களுக்கும் மிகவும் வறிய மக்களுக்கும் இவ்வாறான திட்டங்கள் இருப்பதும் தெரியாத விடையமாகவே காணப்படுகின்றது அவ்வாறு தெரிந்து கோரிக்கை வைத்தாலும் அவர்களுக்கு காணித்துண்டுகள் வழங்கப்படுவது மிக மிக குறைவு.

இந்த நிலையில் கடந்த 07.10.2022 அன்று மாந்தை கிழக்கின் மாபியாக்கள் என மக்களால் அறியப்பட்ட நபர்கள் பொலீசாரின் பாதுகாப்புடனும் அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்களின் துணையுடன் சட்டவிரோத காடழிப்புக்கு உதவி செய்து வருகின்றார்கள் என மக்கள் தெரிவித்ததை செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாண்டியன் குளம் பிரதேசத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

27.10.2022 வியாழக்கிழமை மாலை வேளை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் ஊடக வியலாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியாளரின் பெயரிற்கு தொடர்புபடாத பிரதேச ஊடகவியலாளரை விசாரனை செய்துள்ளார்கள்.

பாண்டியன் குளம் பொலிஸாரால் பத்திரிகை நிறுவனத்திற்கும் தொடர்பு கொண்டு கடந்த 07.10.2022 அன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் செய்தியாளரை அடையாளப்படுத்துமாறு கோரியுள்ளார்கள்.

ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு! | Continued Deforestation Complain To Police

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தவறும் அரச நிர்வாக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

இவ்வாறான சம்பவங்களை வெளிப்படுத்தும் நோக்கில் மக்கள் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்து அதனை செய்தியாக்கம் செய்யும் ஊடகவியலாளர்களுக்கு ஊடக பணியினை முழுமையாக மேற்கொள்ளமுடியாது இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றமை கவலையளிக்கின்றது.

வெளிமாவட்ட ஊடகவியலாளர்களை தொடர்புகொள்ளும் அரச அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளரின் புனைபெயர், இலக்கம் கொண்ட செய்தியாளரை இனம் காட்டுமாறும் தெரிவித்து வருகின்றார்கள்.

மனஉளைச்சலுக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்ட மக்கள்

ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு! | Continued Deforestation Complain To Police

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 12.10.2020 அன்று முறிப்பு பகுதியில் சட்டவிரோத தேக்கு மரங்கள் அறுக்கப்படுவது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு அவர்களது ஒளிப்பட கருவிகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்றுவரை வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் தொடர்ந்து வரும் நிலையில் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை செய்தி அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களும் மேலும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றமையினால் மன உளைச்சலுக்கு உள்ளாகிவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US