என்னை அரசியலிலிருந்து அகற்ற சதி! பிள்ளையான் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
என்னை ஒரு கொள்ளைக்காரன் போன்றும், மண் கொள்ளையில் ஈடுபடுகின்றேன் எனவும் சித்தரிக்க சிலர் முயற்சிக்கின்றனர் என, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், என்னை போன்ற நபர்களை அரசியலில் இருந்து அகற்றுவதற்கு, சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் என்னைப் பழிவாங்கி, அரசியலிலிருந்து வெளியேற்ற, சிறையில் அடைத்தனர். ஆனால் நான் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று, அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ளேன் என்பதற்காக, அதனைச் சகித்துக்கொள்ள முடியாத இவர்கள், இவ்வாறு பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,