நாவாந்துறையில் இருவருக்கிடையில் மோதல்! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவந்துறை பகுதியில் இருவருக்கிடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது நேற்று இரவு நடபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குருநகர் பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் குழு மோதலாக மாறிய நிலையில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் 24 வது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமாகியுள்ளன. இந்தநிலையில் பிரதான சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதாக அறிய முடிகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.