யாழில் தடைசெய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட கடற்படையினர் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த தீடிர் சுற்றி வளைப்பானது இன்று(19.01.2024) அதிகாலை வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
இதன் போது கடற்றொழிலாளர்களையும், அவர்களது கடற்றொழில் சொத்துக்களையும் சோதனை செய்த கடற்படையினர் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கடற்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அதிகளவு தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டதோடு கைப்பற்றப்பட்ட வலைகளை அழிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam