அமெரிக்க தூதுவருடன் த.தே.கூட்டமைப்பு திடீர் சந்திப்பு
அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜ தந்திரிகள் இரா.சம்பந்தன் தலைமையிலான த.தே.கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர்.
இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
த.தே.கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் உட்பட மாவை சேனாதிராஜாவும் இதில் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.