நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எந்தத் தேர்தலையும் நடத்துவோம்: மனுஷ நாணயக்கார

Election Commission of Sri Lanka Manusha Nanayakkara Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lankan local elections 2023
By Rakesh Mar 11, 2023 05:58 AM GMT
Report

அரசமைப்பு, சட்டம் என்பவற்றை விட நாட்டு மக்களின் உயிர் வாழும் உரிமைக்கே நாம் முன்னுரிமை வழங்குவோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எந்தத் தேர்தலையும் நடத்துவோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2023) நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எந்தத் தேர்தலையும் நடத்துவோம்: மனுஷ நாணயக்கார | Conducting Elections Current State Not Democratic

தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல

மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியான நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தினால் அரசியல் கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

பொருளாதாரப் பாதிப்பு மீண்டும் தீவிரமடையும் என்பதை எதிர்த்தரப்பினர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயப்படவில்லை.

ஆனால் தற்போது தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதன் பின்னரே எந்தத் தேர்தலையும் நாம் நடத்துவோம்.

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எந்தத் தேர்தலையும் நடத்துவோம்: மனுஷ நாணயக்கார | Conducting Elections Current State Not Democratic

அரசமைப்பு, சட்டம் ஆகியவற்றை விடவும் நாட்டு மக்களின் உயிர் வாழும் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. அந்தப் பொறுப்பை அரசாங்கம் செயற்படுத்துகின்றது.

போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது

குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டு எதிர்த்தரப்பினர் தற்போது போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.

தொழிற்சங்கப் போராட்டத்தால் அரசியல் ரீதியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

எனவே, பொருளாதார முன்னேற்றத்துக்குத் தடையாக மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எந்தத் தேர்தலையும் நடத்துவோம்: மனுஷ நாணயக்கார | Conducting Elections Current State Not Democratic

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை நாம் அன்றும் கூறினோம். இன்றும் கூறுகின்றோம், என்றும் கூறுவோம்.

மோசமான நெருக்கடி

பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்த போது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார்.

ஆனால், எந்த எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கவில்லை.

நாடு எதிர்கொண்ட மோசமான நெருக்கடியைக் கருத்தில்கொண்டு தனி நபராக இருந்து கொண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக அரசாங்கத்தைப் பொறுப்பேற்றார்.

கடந்த ஆறு மாத காலத்தில் அவர் எடுத்த கடுமையான தீர்மானங்களால் நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எந்தத் தேர்தலையும் நடத்துவோம்: மனுஷ நாணயக்கார | Conducting Elections Current State Not Democratic

நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்கின்றார்கள். எங்களின் எதிர்கால அரசியல் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணித்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசில் நாம் ஒன்றிணையவில்லை.

நாட்டு மக்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US