மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் கருத்துக்கு எதிராக கடும் கண்டனம்
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்றுவரும் கருத்து முரண்பாடுகள் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாநகரசபை உறுப்பினர்களும், பொதுமக்களும் சேர்ந்து நடாத்திய சிரமதான பணியின் போது குறித்த இடத்துக்கு வருகை தந்த மாநகர ஆணையாளர் தயாபரனுக்கும்,உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஏன் இவ்வாறு நீங்கள் கீரியும் பாம்பும் ஆக இருக்கிறீர்கள் என்று மக்கள் எழுப்பியுள்ளனர்.இதன் போது ஆணையாளர் நான் கீரியும் அல்ல பாம்பு அல்ல இவர்களை விழுங்க வந்த அணு கொண்டு என்று தெரிவித்ததாக இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்ற மாநகர சபை அமர்வின் போது உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிராக தமது கண்டனங்களையும் சபையில் வெளிப்படுத்தியுள்ளனர்.