தமிழ் பேசும் சமூகங்களை இலக்கு வைக்கும் வர்த்தமானியை இரத்து செய்யுமாறு சர்வதேச யூதர்கள் ஆணைக்குழு கண்டனம்
இன, மத ரீதியான வன்முறைகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் உள்ளடக்கங்கள் இன, மத தமிழ் பேசும் சமூகங்களை இலக்கு வைக்கின்ற வகையில் அமைந்திருப்பதாகத் தெரிவித்து சர்வதேச யூதர்கள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடுகையில், ஒருவரை விசாரணைகளின்றி இரு வருட காலத்திற்குத் தன்னிச்சையாகத் தடுத்து வைப்பதற்கு அனுமதியளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களைக் கடுமையாகக் கண்டனம் செய்கிறோம். இந்த வழிகாட்டல்கள் குறிப்பாக இன, மத அடிப்படையிலான தமிழ் பேசும் சமூகத்தை இலக்கு வைப்பதாக அமைந்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கையெழுத்திட்டுக் கடந்த 12ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இன, மத ரீதியான அடிப்படை வாத சிந்தனைகளைப் பரப்புதல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டமைக்காக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களைப் புனர்வாழ்விற்கு உட்படுத்துவது தொடர்பில் பின்பற்றக்கூடிய வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் ஆராயப்படவில்லை என்பதுடன், நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதியினாலேயே தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இன, மத ரீதியில் சமூகங்களுக்கு இடையில் வன்முறைகளைத் தூண்டுதல், அமைதியின்மையை ஏற்படுத்துதல், அடிப்படைவாத சிந்தனைகளை விதைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோரை விசாரணைகளின்றி இரு வருடங்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையங்களில் தடுத்து வைத்து புனர்வாழ்வளிக்க முடியும்.
அனைத்துலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஆறாவது சரத்தின் பிரகாரம் ஒவ்வொரு பிரஜையினதும் சுதந்திரத்தை உறுதி செய்வது தொடர்பில் இலங்கை சில உத்தரவாதங்களை வழங்கியிருக்கிறது. எனினும் அந்த உத்தரவாதங்களை தற்போது புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் பின்பற்றப்படவில்லை.
தமிழ் பேசும் சமூகத்தை இலகுவாகத் துன்புறுத்தும் விதமான பயங்கரவாத தடைசட்டத்தின் கூறுகளை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே வலுப்படுத்தி வருகிறது.
குறிப்பாகத் தமிழ் பேசும் சமூகத்தின் மீதான பொறுப்புணர்வு அல்லது வன்முறையைத் தூண்டுவோருக்கு எதிராக உரிய அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 17 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
