அமைச்சர் லால்காந்தவிற்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு!
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தவிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக் குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊழல், மோசடி மற்றும் விரயம் என்பனவற்றுக்கு எதிரான பிரஜைகள் சக்தி என்ற அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடுவெல பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் லால்காந்தவிற்கு சொந்தமான ஆடம்பர வீடு தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினராக எந்த ஒரு தொழிலிலும் அல்லது வியாபார நடவடிக்கைகளும் ஈடுபடாது, முழு நேர அரசியலில் ஈடுபட்டிருந்த லால்காந்த இவ்வாறான ஓர் ஆடம்பர வீடு நிர்மாணித்தமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த வீடு மோசடியான கொடுக்கல் வாங்கல் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தில் நிர்மாணிக்கப்பட்டதா அல்லது அவரது உண்மையான வருமானத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சந்தேகம் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணை குழுவிற்கு வருடாந்தம் வழங்கப்பட வேண்டிய சொத்து பொறுப்பு விபரங்களில் இந்த வீடு குறித்த தகவல்களை உள்ளடக்கப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
ஊழல் மோசடி மற்றும் விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி கமன்த துஷார என்பவரினால் அமைச்சர் கே.டி. லால்காந்தவிற்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.