இராணுவத்தினருக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடு மீளப்பெறப்பட்டது
முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுச் சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு பின்னர் மீளப்பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் இன்று பொலிஸார் இவ்வாறு தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுச் சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பைச் சேர்ந்த மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரித்துள்ளனர்.