பாதுகாப்பு படையினரின் அதிகாரம் தொடர்பில் வெளியான தகவல்- செய்திகளின் தொகுப்பு
பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதன் மூலம் நாட்டை ஒரு வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முதல் தடவையாக கூடிய அமைச்சரவையில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கோட்டா முறையின் கீழ் விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,