38 இலட்சம் பெறுமதியான நகைகளை மந்திரவாதியிடம் பறிகொடுத்த பொதுமகன்
ஒரு குடும்பத்திற்கு ஏற்பட்ட தீய விளைவுகளை நீக்க சடங்குகளைச் செய்யச் சென்றதாக கூறப்படும் ஆண்கள் குழு ஒன்று, 3.8 மில்லியன் மதிப்புள்ள நகைகளுடன் தப்பிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் சிலாபத்தில் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநராக செயற்பட்டு வருகிறார் இந்த நிலையில் அவர் முன்னேஸ்வரம் கோயிலுக்கு அடிக்கடி வரும் ஒரு மந்திரக்காரரின் சொல்லுக்கு இணங்கியுள்ளார்.
தீய கிரக செல்வாக்கால் அவரது குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய பேரழிவு குறித்து மந்திரக்காரர் அவரை எச்சரித்து, அதை அகற்ற சடங்குகளைச் செய்ய, குறித்த பொதுமகன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பொலிஸ் விசாரணைகள்
அங்கு, மந்திரக்காரர் சடங்குகளைத் தொடங்கிய போது, அவர்கள் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் ஒரு பானையில் போட்டு, ஆசிர்வதிக்க, தம்மிடம் ஒப்படைக்குமாறு வீட்டின் உரிமையாளருக்கு அறிவுறுத்தினார்.

சடங்குகளுக்குப் பிறகு, மந்திரக்காரர், பானையைத் திருப்பிக் கொடுத்து, வீட்டின் உரிமையாளரிடம் அதை சன்னதி அறையில் வைக்குமாறும், ஐந்து நாட்களுக்கு அதைத் திறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
இருப்பினும், சந்தேகத்தில் அவர் சென்ற பிறகு, வீட்டின் உரிமையாளர் பானையைத் திறந்தபோது அது வெற்றாக இருப்பதைக் கண்டார்.
இந்த நிலையில், குறித்த மந்திரக்காரர்,ஒரு இந்தியர் என்று சந்தேகிப்பதாக அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri