50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சாஜன் கைது
அம்பாறை தமண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவர் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலன்விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரிப்பொத்தான்சேனை பிரதேசத்தில் வைத்து நேற்று (03.05.2023) சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம் ரூபா இலஞ்சம்
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக அம்பாறை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கிற்கு சாதகமாக செயற்படுவதற்கு 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பொலிஸ் சாஜன் கோரியுள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அளித்த முறைப்பாட்டையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்று (3.05.2023) மாலை வரிபொத்தான்சேனை பிரதேசத்தில் வைத்து மாறு வேடத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற பொலிஸ் சாஜன் இலஞ்சமாக குறித்த நபரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றபோது அவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், கொழும்பிற்கு கொண்டு
சென்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
