2022ம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஆரம்பம்! - அ.மரின்குமார்
மன்னார் மாவட்டத்தில் 2022ம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ. மரின்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று (8) மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால் உரிய நடைமுறைகளுடன் குறித்த திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கமக்காரர்களிடம் மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கோரியுள்ளார்.
வயற் காணி இடாப்பு மீள்திருத்த வேலையின் பொருட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள 13 கமநல சேவைகள் நிலையங்களிலும் வயற்காணி பதிவேடுகளை விவசாயிகள் பார்வையிட முடியும்.
வயற்காணி பதிவேட்டில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கமக்காரர்கள் தங்கள் வயற்காணி அமைந்துள்ள கமநல சேவைகள் நிலையங்களில் விண்ணப்ப படிவங்களைப் பெற்று பூரணப்படுத்தி தேவையான ஆவணங்களுடன் கமநல சேவை நிலையங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் வயற்காணி பதிவைத் திருத்திக் கொள்ள முடியும்.
எதிர்பார்த்துள்ள தங்கள் காணி தொடர்பில் இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத கமக்காரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் காணிப் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
வயற் காணி இடாப்பு மீள்திருத்தம் தொடர்பான மேலதிக விபரங்களை தங்கள் பகுதிக்கு பொறுப்பான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் அல்லது கமநல சேவைகள் நிலையங்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
2022 ம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஜனவரி
மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால் சுகாதார வழி காட்டல்களுக்கமைய
கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இவ் வேலைத்திட்டத்துக்கு
ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
அ.மரின்குமார் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021