இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமானச்சேவைகள் ஆரம்பம்
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் 6 வருடங்களுக்குப் பின்னர் இன்று நேரடி விமானச்சேவைகள் ஆரம்பமாகின என இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கட்டுநாயக்க விமானத்தளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு மணிக்கு ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் 563 விமானம் பிரான்ஸின் சார்ல்ஸ் டு கோ (Charles de Gaulle) விமானத்தளத்தை நோக்கிப் புறப்பட்டது.
இந்த பயணத்துக்கு 10 மணித்தியாலங்கள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு சிறிய நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்தநிலையில் இந்த சேவை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பிரான்ஸை நோக்கி மேற்கொள்ளப்படும். அதேநேரம் அன்றைய தினம் மாலையில் மற்றுமொரு ஸ்ரீலங்கன் எயாார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்கவை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் 1980இல் ஆரம்பிக்கப்பட்டது. அது 2015ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.