வவுனியாவிலிருந்து ஏனைய மாகாணங்களிற்கு பேருந்து சேவை ஆரம்பம்
வவுனியாவிலிருந்து வெளி மாகாணங்களிற்கான பேருந்து சேவைகள் நாளை (25) காலை முதல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய தொழில் புரிவோரின் வசதி கருதிக் குறித்த பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் காலை 05.45 மணிக்கு இ.போ.ச வவுனியா சாலையின் பேருந்து வவுனியாவிலிருந்து கண்டி நோக்கிப் புறப்படவுள்ளதுடன், காலை 06.30 மணிக்கு வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படவுள்ளது.
காலை 07.30 மணிக்கு வவுனியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கியும், காலை 07.00 மணிக்குக் கொழும்பு நோக்கியும் பேருந்துகள் புறப்படவுள்ளது.
குறித்த பேருந்துகளில் பயணிப்போர் அத்தியாவசிய சேவைக்குரிய அடையாள அட்டையினை
காண்பித்துப் பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
