வவுனியாவிலிருந்து ஏனைய மாகாணங்களிற்கு பேருந்து சேவை ஆரம்பம்
வவுனியாவிலிருந்து வெளி மாகாணங்களிற்கான பேருந்து சேவைகள் நாளை (25) காலை முதல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய தொழில் புரிவோரின் வசதி கருதிக் குறித்த பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் காலை 05.45 மணிக்கு இ.போ.ச வவுனியா சாலையின் பேருந்து வவுனியாவிலிருந்து கண்டி நோக்கிப் புறப்படவுள்ளதுடன், காலை 06.30 மணிக்கு வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படவுள்ளது.
காலை 07.30 மணிக்கு வவுனியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கியும், காலை 07.00 மணிக்குக் கொழும்பு நோக்கியும் பேருந்துகள் புறப்படவுள்ளது.
குறித்த பேருந்துகளில் பயணிப்போர் அத்தியாவசிய சேவைக்குரிய அடையாள அட்டையினை
காண்பித்துப் பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 12 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri