யாழில் தியாக தீபத்தின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
தியாக தீபத்தின் நினைவேந்தல் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை
அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு யாழில் நேற்று (21.09.2023) மாலை 5 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் நினைவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஈகை சுடரேற்றபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் தியாக தீபத்தின் அகிம்சை பயணம் தொடர்பில் நினைவுரை ஆற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறும்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளீர் அணியினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |