யாழில் இடம்பெற்ற கறுப்பு யூலை படுகொலையின் நினைவேந்தல்
கறுப்பு யூலை படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தலும் பொதுக் கூட்டமும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நேற்று (27.07.2024) நடைபெற்றுள்ளது.
இதன்போது, கடந்த 1983ஆம் ஆண்டு ஜீலை 25-27 ஆம் திகதிகளில் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியற் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மலரஞ்சலி
இதில் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஏனையவர்களும் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் என்.சிறிகாந்தா உள்ளிட்ட ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் யூலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
