தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை சிறப்பாக நடத்த ஏற்பாட்டுக் குழு நியமனம்
எந்த நோக்கத்திற்காக தியாக தீபம் திலீபன் தன்னுடைய உயிரை தியாகம் செய்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான ஒரு தளமாக இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம் என யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
நல்லை ஆதீனத்தில் நேற்று (19.09.2022) இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து நினைவேந்தலை சிறப்பாக செய்வது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
இதன்போது நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஏற்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டுக் குழுவில் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழுவினை ஏற்பாடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
