தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை சிறப்பாக நடத்த ஏற்பாட்டுக் குழு நியமனம்
எந்த நோக்கத்திற்காக தியாக தீபம் திலீபன் தன்னுடைய உயிரை தியாகம் செய்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான ஒரு தளமாக இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம் என யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
நல்லை ஆதீனத்தில் நேற்று (19.09.2022) இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து நினைவேந்தலை சிறப்பாக செய்வது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வு
இதன்போது நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஏற்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டுக் குழுவில் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழுவினை ஏற்பாடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam