தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்(Photos)
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவேந்தல் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், 'பார்த்தீபன் இன்னமும் பசியோடு இருக்கின்றான்' என்ற உணர்வினை நெஞ்சினில் தாங்கியவாறு தியாக தீபம் திலீபனின் நினைவிருத்தி விளையாட்டு வீரர்கள் பலர் பிரித்தானியாவில் ஆடுகளங்கண்டுள்ளனர்.
விளையாட்டு போட்டிகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு துறை அமைச்சினால், 7வது தடவையாக விளையாட்டு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் நீதிராசா தலைமையில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்த விளையாட்டு போட்டியில் பிரித்தானியாவின் பல கழகங்கள், குழுக்கள் பங்கெடுத்து வெற்றிகளை தமதாக்கி கொண்டுள்ளனர்.
திலீபனுக்கு அஞ்சலி

இதன்போது, கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல விளையாட்டுக்கள் சிறப்புடனும் பிரமாண்டமாகவும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam