பருத்தித்துறை முனைப்பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (VIDEO)
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் இன்றைய தினம் தேசத்தின் விடுதலைக்காய் போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டியும் மாவீரர் தினத்தினை உணர்வுபூர்வமாக தாயக உறவுகள் அனுஷ்டித்து வருகின்றனர்.
அந்த வகையில்,பருத்தித்துறை முனைப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்....
வல்வெட்டித் துறையில் இராணுவ முற்றுகையை உடைத்தெறிந்து கண்ணீருடன் மாவீரர்களுக்கு அஞ்சலி
யாழ். சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினரின் கடுமையான கெடுபிடி
மாவீரர்களை நினைவேந்திய அனைவரும் கூண்டோடு கைதாகுவார்கள்! அரசு எச்சரிக்கை