இன்னும் 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்..! கொழும்பு வாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்
கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரண்ட வானிலை காரணமாக மேல் மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
இரண்டு வாரங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தகவல்களின்படி கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இன்னும் 22 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளதாகவும் கூறியுள்ளது.

அத்துடன் லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளது. கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவினால் இங்கு 15,000 கனமீட்டர் நீர் உற்பத்தி குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வுத் திணைக்களத்திடம் இருந்து நாங்கள் அறிந்துள்ளோம். இதனால், நீர் விநியோகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
24 மணி நேர நீர்வெட்டு
எனவே எதிர்வரும் வாரங்களில் பண்டிகைக் காலம் என்பதால் நீரின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும், எனவே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவமனைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களை நடத்துவதற்கு நீர் விநியோகம் இன்றியமையாதது. தொழில்துறை தேவைகளுக்கும் நீர் விநியோகம் அவசியமாகும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை பெய்யாவிட்டால், நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், ஹோமகம, படுக்க மற்றும் பெலன்வத்தை பகுதிகளில் நேற்று (02) இரவு 8.00 மணி முதல் இன்று (03) இரவு 8.00 மணி வரை 24 மணி நேர நீர்வெட்டு நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை